Tamilnadu
ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மோசடி : பா.ஜ.க நிர்வாகி கைது!
சென்னை மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முகைதீன் பாத்திமா பீவி. இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதியில் 2,347 சதுரடி நிலத்தை ஏழுமலை மற்றும் தனசேகர் ஆகியோரிடம் விலைக்கு வாங்கியுள்ளார்.
இதையடுத்து கடந்த ஆண்டு இந்த நிலம் தொடர்பாக வில்லங்கம் சரிபார்த்துள்ளார். அப்போது இவரது பெயரில் போலியான ஆவணங்களைக் கொண்டு பத்மநாபன் என்பவர் நிலத்தைப் பதிவு செய்தது தெரியவந்தது.
இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும். பின்னர் இது குறித்து முகைதீன் பாத்திமா பீவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி நடந்தது உறுதியானது. இதையடுத்து பத்மநாபனை போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பத்மநாபன் சோலைநகர் பா.ஜ.க ஒன்றிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !