Tamilnadu
ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மோசடி : பா.ஜ.க நிர்வாகி கைது!
சென்னை மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முகைதீன் பாத்திமா பீவி. இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதியில் 2,347 சதுரடி நிலத்தை ஏழுமலை மற்றும் தனசேகர் ஆகியோரிடம் விலைக்கு வாங்கியுள்ளார்.
இதையடுத்து கடந்த ஆண்டு இந்த நிலம் தொடர்பாக வில்லங்கம் சரிபார்த்துள்ளார். அப்போது இவரது பெயரில் போலியான ஆவணங்களைக் கொண்டு பத்மநாபன் என்பவர் நிலத்தைப் பதிவு செய்தது தெரியவந்தது.
இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும். பின்னர் இது குறித்து முகைதீன் பாத்திமா பீவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி நடந்தது உறுதியானது. இதையடுத்து பத்மநாபனை போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பத்மநாபன் சோலைநகர் பா.ஜ.க ஒன்றிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“Computer Expert பழனிசாமியின் கனவு பலிக்காது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை!
-
#VBGRAMG - மன்னிக்க முடியாத பச்சைத் துரோகம் : எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
நாடு முழுவதும் எத்தனை தபால் அலுவலகங்கள் மூடப்பட்டன? : நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு MP கேள்வி!
-
அமெரிக்க வரிவிதிப்பு : விரைவில் தீர்வு காண வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
காந்தியின் ராமராஜ்யமும், பா.ஜ.கவின் வதை ராஜ்யமும் : தெள்ளத் தெளிவாக விளக்கிய முரசொலி!