Tamilnadu
ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மோசடி : பா.ஜ.க நிர்வாகி கைது!
சென்னை மடுவங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முகைதீன் பாத்திமா பீவி. இவர் கடந்த 1990 ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதியில் 2,347 சதுரடி நிலத்தை ஏழுமலை மற்றும் தனசேகர் ஆகியோரிடம் விலைக்கு வாங்கியுள்ளார்.
இதையடுத்து கடந்த ஆண்டு இந்த நிலம் தொடர்பாக வில்லங்கம் சரிபார்த்துள்ளார். அப்போது இவரது பெயரில் போலியான ஆவணங்களைக் கொண்டு பத்மநாபன் என்பவர் நிலத்தைப் பதிவு செய்தது தெரியவந்தது.
இந்த நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடியாகும். பின்னர் இது குறித்து முகைதீன் பாத்திமா பீவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்தினர். இதில் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி நடந்தது உறுதியானது. இதையடுத்து பத்மநாபனை போலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பத்மநாபன் சோலைநகர் பா.ஜ.க ஒன்றிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”