Tamilnadu
கொளுத்தும் வெயிலால் கோடை விடுமுறை நீட்டிப்பு... பள்ளிகள் திறப்பு எப்போது? - புதிய அறிவிப்பு!
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் மே மாதம் முழுவதும் கோடை வெயிலை முன்னிட்டு மாணவர்களுக்கு அம்மாதத்தில் விடுமுறை அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பள்ளிகள் திறப்பு வரும் ஜூன் 6-ம் தேதி என்று பள்ளிக்கல்வித்துறை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, அவர்களுக்கு புத்தக விநியோகம் செய்திடவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இந்த முறை கோடை வெயில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அண்மையில் கோடை காலத்தில் வந்த ரீமல் புயல் கரையை கடந்த பிறகு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த வகையில் தற்போது வெயில், வெப்பம் உள்ளிட்டவையின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு மிகவும் சிரமத்துக்கு உள்ளாவர்.
இதனை கருத்தில் கொண்டு தற்போது மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு தேதியை ஜூன் 6-ல் இருந்து ஜூன் 10-க்கு ஒத்திவைத்துள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. ஏற்கனவே புதுச்சேரியில் ஜூன் 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜூன் 10-ம் தேதி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!