Tamilnadu
தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் : தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மாநில கல்வித்துறை ஆய்வு மற்றும் பயிற்சி ஆலோசனை கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கருத்தரங்கில் பீகார் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 46 மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த ஆலோசனை கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு கல்வித்துறையில் எந்த அளவு வளர்ச்சியை கண்டுள்ளது என்றும் இதன் மூலம் எந்த அளவு மக்களின் வாழ்வாதாரம் கல்வியால் உயர்ந்துள்ளது என்பதனை ஆய்வு மேற்கொண்டு அறிந்து கொள்வதற்காக பிஹார் மாநிலத்தை சேர்ந்த கல்வி அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளார்கள்.
மேலும் இங்கு தெரிந்து கொண்ட கல்வி முறைகளையும் தமிழ்நாடு பின்பற்றக்கூடிய கல்வி நடைமுறைகளை பீகார் மாநிலத்திற்கு கொண்டு சென்று அங்கு இதனை விரிவுபடுத்த அரசுக்கு ஆலோசனை வழங்கவும் உள்ளார்கள். 5 சுற்றுகளாக பீகார் மாநில கல்வி அதிகாரிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது .
இதற்கு முன் இரண்டு சுற்றுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், மூன்றாவது சுற்றிற்கான அதிகாரிகள் தற்போது வந்துள்ளனர் அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு கல்வித்துறையின் அமைப்பு குறித்தும் தமிழக கல்வித்துறையில் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பாட புத்தகங்கள் குறித்தும் பீகார் கல்வித்துறை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
Also Read
-
“நிஜமான கேள்விகளைக் கண்டால் இப்படிப் பயந்து ஓடத்தான் முடியும்” : அமைச்சர் ஆனந்துக்கு DMK IT WING கண்டனம்!
-
“மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்ய வக்கற்ற த.வெ.க அமைச்சர்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் விமர்சனம்!
-
“தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினை காவிரி.. முன்பே கணித்துதான் எச்சரித்தோம்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது! : ஓய்வுபெற்ற நீதியரசர் அரிபரந்தாமன்!
-
கொள்கைத் தலைவர் பெரியார்.. ஆனால் பெரியார் திடலில் போலீஸ் குவிப்பு.. விஜய்க்கு ஏன் பதற்றம்? : முரசொலி!