Tamilnadu
பூத் ஏஜென்ட் எங்கே பணம்? : பா.ஜ.க செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அக்கட்சி நிர்வாகிகள்!
தென் சென்னை மக்களவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகத் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி அன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின் போது பா.ஜ.க கட்சி நிர்வாகிகள் அனைத்து தொகுதிகளிலும் பூத் ஏஜெண்டாக பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்நிலையில் பூத் ஏஜெண்டாக பணியாற்றியதற்குப் பணம் தரவில்லை என கூறி தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளருக்கு பா.ஜ.க நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளராக இருப்பவர் முத்து மாணிக்கம். இவர் கடந்த 20 ஆம் தேதி துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜக மண்டல தலைவர் ஜெகநாதன் வீட்டில் தேர்தல் பணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பா.ஜ.கவை சேர்ந்த டிக்காராம், வெங்கட், மாரியம்மாள் உட்பட 5 பேர் பூத் ஏஜெண்டாக பணியாற்றியதற்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முத்து மாணிக்கத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து முத்து மாணிக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்து பா.ஜ.கவை சேர்ந்த 8 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!