Tamilnadu
பூத் ஏஜென்ட் எங்கே பணம்? : பா.ஜ.க செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த அக்கட்சி நிர்வாகிகள்!
தென் சென்னை மக்களவை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகத் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி அன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின் போது பா.ஜ.க கட்சி நிர்வாகிகள் அனைத்து தொகுதிகளிலும் பூத் ஏஜெண்டாக பணியாற்றி இருக்கிறார்கள்.
இந்நிலையில் பூத் ஏஜெண்டாக பணியாற்றியதற்குப் பணம் தரவில்லை என கூறி தென் சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளருக்கு பா.ஜ.க நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் சென்னை கிழக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளராக இருப்பவர் முத்து மாணிக்கம். இவர் கடந்த 20 ஆம் தேதி துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள பாஜக மண்டல தலைவர் ஜெகநாதன் வீட்டில் தேர்தல் பணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த பா.ஜ.கவை சேர்ந்த டிக்காராம், வெங்கட், மாரியம்மாள் உட்பட 5 பேர் பூத் ஏஜெண்டாக பணியாற்றியதற்கு ஏன் பணம் கொடுக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் முத்து மாணிக்கத்திற்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பின்னர் இது குறித்து முத்து மாணிக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்து பா.ஜ.கவை சேர்ந்த 8 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!