Tamilnadu
மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேச்சு : பிரதமர் மோடி மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு!
ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வுகளை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசியது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மேலும் மோடி மீது தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையடுத்து மோடியின் பேச்சு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேசிய பிரதமர் மோடி மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை ஆணையரிடம் வெல்ஃபேர் பாார்ட்டி ஆப் இந்தியா தமிழ்நாடு கட்சியின் மாநில தலைவர் அப்துல் ரஹ்மான், பிரதமர் மோடி மீது புகார் அளித்துள்ளார்.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்தில் பிரதமர் மோடி மீது கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாகத் தலைவர் க.தமிழரசன் புகார் மனு அளித்துள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!