Tamilnadu
”தி.மு.க-வை அழிக்க இந்த நாட்டில் எந்த கொம்பனும் பிறக்கவில்லை” : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்!
தமிழ்நாட்டில் ஏப்ரல்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தியா கூட்டணியில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ஆம்பூரில் நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், " இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல. ஜனநாயகம், அரசியல் சட்டத்தை காப்பதற்கான தேர்தல்.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தி.மு.கவை சுக்கு நூறாக உடைப்பேன் என பிரதமர் மோடி பேசுகிறார். ஒரு தலைவர் இப்படியா பேசுவது. தி.மு.க என்ன பூச்சியா நசுக்கிவிட. தி.மு.க என்பது நெருப்பாற்றில் பூத்தப் பூ. ஒரு போதும் அழிக்க முடியாது.
தி.மு.கவை அழிக்க இந்த நாட்டில் எந்த கொப்பனும் பிறக்கவில்லை. தி.மு.கவை அழிப்பேன் என்று சொன்ன ராஜகோபாலச்சாரியார் மூட்டைப் பூச்சி போல் அழிந்துபோனார். உடல், பொருள், ஆவி அனைத்தும் கழகத்திற்காக நாங்கள் ஒப்படைத்துள்ளோம்" என உணர்ச்சி பொங்கப் பேசியுள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!