Tamilnadu
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2024 : அரசுக்கு விவசாய சங்கங்கள் பாராட்டு!
தமிழ்நாடு 2024 - 2025-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த மகத்தான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பலனளிக்கும் வகையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தஞ்சை மாவட்டம் கல்லணை கால்வாய் பணிகளை மேம்படுத்த ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது, தஞ்சையில் தொழிற்பூங்கா அமைக்க ரூ.120 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு விவசாயிகள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன் அளித்த பேட்டியில், “கல்லணை கால்வாய் புணரமைப்பு செய்ய ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை வரவேற்கிறோம். இதன் மூலம் தஞ்சை மாவட்ட கடைமடை, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி சாகுபடி சிறப்பாக அமையும். அதே போல் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிள்ளைகள் பயன் பெரும் வகையில் 120 கோடி ரூபாய் மதிப்பில் தொழிற் பூங்கா உள்ளிட்ட அறிவிப்புகளை மனதார வரவேற்கிறோம்” என்றார்.
தொடர்ந்து தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதி செந்தில் அளித்த பேட்டியில், “ஏரி , குளங்களை தூர்வாருவதற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை வரவேற்கிறோம். மிகுந்த பயனை இத்திட்டம் அளிக்கும். ஒன்றிய அரசு நிதியுதவி செய்ய மறுத்து வரும் நிலையில், இக்கட்டான சூழ்நிலையிலும் தஞ்சை மாவட்டத்தில் தொழிற்பூங்கா உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்” என்றார்.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?