Tamilnadu
2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை : முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் பிப். 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது. இதையடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தியும் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்யும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் 2 தனித் தீர்மானங்களை தாக்கல் செய்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இன்று ““தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சாரக தங்கம் தென்னரசு பெறுப்பேற்று முதல் முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
முன்னதாக “தடைகளைத் தாண்டி” 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கும் முத்திரைச் சின்னத்தை நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்டது. மேலும் “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்துச் சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்” எனத் தெரிவித்துள்ளது.
அதோடு 2024-25 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்கனவுகள் என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம்,அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
நாளை 2024-25 ஆம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.
Also Read
-
"வெல்வோம் 200! படைப்போம் வரலாறு அதுவே என் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி" : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“வி.பி.சிங் போன்ற பிரதமரை கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திராவிட மாடல் 2.0 ஆட்சியை மலரச் செய்வோம் : பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி சூளுரை!
-
“விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும்” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சமூக விரோத சட்டங்கள் : தொழிலாளர் வர்க்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் ஒன்றிய அரசு - முரசொலி!