Tamilnadu

நான் முதல்வன் திட்டத்தில் 1.19 லட்சம் மாணவர்கள் பயன் : இளைஞர்கள் கனவை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு!

தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற திட்டத்தை 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து இலட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது ஆகும். அதன்படி நான் முதல்வன் திட்டத்தில் இணைந்து மாணவர்கள் திறன் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் 2022 -23 ஆம் ஆண்டில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன் பயிற்சி பெற்று 1.19 லட்சம் மாணவர்கள் பணி ஆணை பெற்றுள்ளனர் என இந்து ஆங்கில நாளேடு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், 61,920 பொறியியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் 57,313 கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் நான் முதல்வன் திட்டத்தில் பயனடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த மாணவர்கள் Cognizant Technology Solutions (CTS) India Private Limited, Tech Mahindra, TVS Group of Companies, Fox Conn Hon Hai Technology, Pegatron India Private Limited, Bosch Global Software Technologies Private Limited, Sutherlands Global போன்ற நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடந்த ’நான் முதல்வன்’ திட்டத்தின் பணியிட கலந்தாய்வில் இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் பணியிட அமர்வு உத்தரவுகளை பெற்றிருக்கின்றனர்.

கிருஷ்ணகிரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 1,591 பேர் பங்கேற்றனர். இதில் 580 இரண்டாம் கட்ட நேர்காணலுக்கு தேர்வானவர்கள்: 461 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. இவர்களுக்கு அதிகபட்ச ஊதியம் (வருடத்துக்கு): ரூ.3.35 லட்சம்

அதேபோல் சேலத்தில் நடந்த முகாமில் 425 மாணவர்கள் தேர்வானார்கள். இவர்களுக்கு அதிகபட்ச ஊதியம் (வருடத்துக்கு): ரூ.2.4 லட்சம். கள்ளக்குறிச்சியில் நடந்த முகாமில் 24 பேர் வேலைகளுக்கு தேர்வானவர்கள்: 967அதிகபட்ச ஊதியம் (வருடத்துக்கு): ரூ.3 லட்சம். அரியலூரில் நடந்த முகாமில் 561 வேலைகளுக்கு தேர்வானவர்கள். கடந்த வருடம் நடத்தப்பட்ட கலந்தாய்வில் தமிழ்நாட்டின் 1.19 லட்சம் மாணவர்கள் வேலைகளுக்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Also Read: ”மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு போடும் கடிவாளம்” : உண்மையை விளக்கும் ஜெ.ஜெயரஞ்சன்!