Tamilnadu
புதிய பேருந்து நிலையம்: “90% அடிப்படை தேவைகள் நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் அரசு” - அமைச்சர் சேகர்பாபு!
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பணிகளை துவங்கி வைத்தனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இன்றுடன் 36 நாள் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் சரியான திட்டமிடல் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி தற்போது ரூ.14 கோடியே 35 லட்சம் செலவில் காவல் நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த காவல் நிலையம், காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. முடிச்சூர் ஆம்னி பேருந்துகளுக்காக கட்டப்படும். அந்த பணியும் ஏப்ரல் மாதத்தில் நிறைவுபெறும்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மிக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும். விலை குறைவான தரமான உணவுகள் வழங்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 32 கடைகள் பயன்பாட்டில் இருந்தது. அதன் உரிமையாளர்களுக்கு மாற்று கடைகள் சலுகை விலையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நீதிமன்றத்தில் எந்த முடிவு எடுக்கப்படுகிறதோ? அதன் பிறகு முடிவு செய்யப்படும்?
கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றப்படும்போது புகார்கள் சொல்லியே மாய்ந்து போனார்கள். அங்கு 7 வருடங்கள் கழித்தே ஆம்னி பேருந்துகள் செயல்படுத்தப்பட்டன. ஆனால் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட 35 நாட்களுக்குள் 90% அடிப்படை தேவைகள் நிறைவேற்றியுள்ளது திராவிட மாடல் அரசு.” என்றார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!