Tamilnadu
பெற்றோர் கண்முன்னே உயிரிழந்த 2 பெண் குழந்தைகள் : புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் தனது மனைவி காவேரி மற்றும் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆம்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, மாராப்பட்டு பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையில் முன்னாள் சென்ற லாரி திடீரென திரும்பியது. இதனால் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.
இதில் கீழே விழுந்த பரந்தாமனின் இரண்டு பெண் குழந்தைகளான கார்த்திகா ஸ்ரீ (9), பேரரசி (6) ஆகிய இருவரும் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் குழந்தைகள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் பெற்றோர்கள் கண்முன்னே குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“நீலப்பொருளாதாரத்தில் முன்னணி மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
மாநிலங்களவை தேர்தல் : வெளியானது தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல்!
-
காங்கிரஸ் கட்சிக்கு 28+1 ; கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது!
-
ரூ.42.94 கோடியில் 14 விளையாட்டுத்துறை கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
10 மாவட்டங்களில்.. 10 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள்! : முதல்வர் திறந்து வைத்தார்!