Tamilnadu
பெற்றோர் கண்முன்னே உயிரிழந்த 2 பெண் குழந்தைகள் : புத்தாண்டு தினத்தில் நடந்த சோகம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் தனது மனைவி காவேரி மற்றும் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஆம்பூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது, மாராப்பட்டு பகுதியில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலையில் முன்னாள் சென்ற லாரி திடீரென திரும்பியது. இதனால் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியது.
இதில் கீழே விழுந்த பரந்தாமனின் இரண்டு பெண் குழந்தைகளான கார்த்திகா ஸ்ரீ (9), பேரரசி (6) ஆகிய இருவரும் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் குழந்தைகள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் பெற்றோர்கள் கண்முன்னே குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”பொது விவாதத்திற்கு நான் தயார்” : ராகுல் காந்தி எம்.பி அதிரடி அறிவிப்பு!
-
96 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் 4-ம் கட்டத் தேர்தல் : எந்தெந்த மாநிலங்களில் வாக்குப்பதிவு? - முழு விவரம்!
-
இந்துத்வ கும்பல் கையில் சிக்கியுள்ள இந்தியா - மீட்க முனைப்பு காட்டும் இந்தியா கூட்டணி!
-
”மிரட்டும் தேர்தல் ஆணையம்” : மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு!
-
3 குழந்தைகள் உள்பட 5 பேரை கொடூரமாக கொன்ற தந்தை... தானும் தற்கொலை செய்துகொண்ட சோகம் - உ.பி-யில் ஷாக்!