Tamilnadu
“பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்போம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
தற்போதைய இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களை மீட்போம் - பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தி வரும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்க டிசம்பர் 24 அன்று சேலத்தில் கூடுவோம் என இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
“மிக்ஜாம் புயல் கனமழை ஏற்படுத்திய வரலாறு காணாத பேரிடரால் சென்னை காஞ்சிபுரம் - திருவள்ளூர் - செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் - இளைஞர் அணியினர் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் களத்தில் இறங்கி மக்களுக்கான நிவாரண உதவிகளைச் செய்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி நள்ளிரவு முதல் தற்போது வரை நானும் தொடர்ந்து களத்தில் நின்று வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கி வருகிறேன்.
குறை கூறுவதற்காக மட்டுமே தலையை வெளியே காட்டும் எதிர்க்கட்சிகளுக்கு மத்தியில், மக்களுடன் நிற்பதும் - அவர்களைப் பேரிடரிலிருந்து மீட்பதுமே நமது தலையாயப் பொறுப்பு. ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளுக்குச் செவிமடுத்தும் - வன்மத்துடன் வருகின்ற விமர்சனங்களை எதிர்கொண்டும் மக்களுக்கான உதவிகளை, நம் கழகத்தினர் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இந்த மாபெரும் மீட்பு நிவாரணப் பணிகளின் காரணத்தால், சேலத்தில் வருகிற 17-ஆம் தேதி நடைபெறவிருந்த 'மாநில உரிமை மீட்பு' முழக்கமான நம் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாட்டை, டிசம்பர் 24-ஆம் தேதி நடத்துவது, என்று தலைமைக் கழகம் அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்புக்கேற்ப இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான பணிகளை ஒருங்கிணைக்க இளைஞர் அணியின் மாநில - மாவட்ட ஒன்றிய - நகர மாவட்டச் செயலாளர்கள் பகுதி - பேரூர் நிர்வாகிகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
இயற்கைப் பேரிடரிலிருந்து நம் மக்களை இப்போது மீட்போம். 10 ஆண்டு காலமாக பாசிஸ்ட்டுகள் ஏற்படுத்தி வரும் செயற்கைப் பேரிடரிலிருந்து நாட்டை மீட்க, டிசம்பர் 24 அன்று சேலத்தில் கூடுவோம்; இளைஞர் அணி மாநாட்டை வெற்றி பெறச் செய்வோம்.”
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!