Tamilnadu
”மனித வாழ்விலிருந்து பிரிக்க முடியாத துறை பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
தமிழ்நாடு பொதுப்பணித் துறை சார்பில் பொது உட்கட்டமைப்பில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்க கூட்டம் சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "அரசின் மூலதனத்தை உருவாக்கும் துறை பொதுப்பணித்துறை தான். இது ஒரு ஜீவநாடி துறை. ரயில்வே, மின்சாரத்துறை, நெடுஞ்சாலை, வீட்டுவசதி, குடிநீர் , காவல்துறை, நீர்வளத்துறை என பலத் துறைகளுக்கு தாய்த்துறை பொதுப்பணித்துறைதான்.
பாரம்பரிய கட்டடங்களை பராமரிப்பு செய்யும் பணியினையும் பொதுப்பணித்துறைதான் செய்கிறது. இந்த துறையை மேலும் மேலும் வளர்த்தெடுப்பதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம். மனித வாழ்விலிருந்து பிரிக்க முடியாத துறை பொதுப்பணித்துறை. கூட்டு முயற்சி தான் வெற்றி பெறமுடியும். இலக்கு வைத்து உழைக்கின்ற போது தான் துறையை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.
கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், நினைவிடம் உள்ளிட்டவற்றை பொதுப்பணித்துறை மிகச் சிறப்பாகச் செய்துள்ளது. எனக்கு பொறியியல் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. மனித வாழ்க்கையும் பெரிதும் உதவியது சிவில். ஆற்றலையும் அறிவியலையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!