Tamilnadu

”ஆளுநர் மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியது மரபாகும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும் விதமாக இன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டம் தொடங்கிய உடன் மறைந்த தகைசால் தமிழர் சங்கரய்யா மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

பின்னர் அரசினர் தனி தீர்மானம் வாசிப்பதற்கு முன்பு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இன்றைக்கு நாம்கூட்டியிருக்கும் சிறப்புக் கூட்டம், அவசர, அவசியம்கருதி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலன்கருதியும், ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டியஅவசியத்தின் அடிப்படையிலும், அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியும்கூட்டப்பட்டுள்ளது.

பேரவைத் தலைவர் அவர்களே,மக்களாட்சித் தத்துவத்தின் கலங்கரைவிளக்கமாகத் திகழும் இந்தச் சட்டமன்றப்பேரவையில் நாம் நிறைவேற்றி அனுப்பியசட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார் ஆளுநர் அவர்கள். “I withhold assent” அதாவது, - தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் - குறிப்பிட்டு, நாம் இங்குநிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளை கடந்த 13.11.2023 அன்று திருப்பி அனுப்பிவைத்திருக்கின்றார்.

ஆளுநரால் திருப்பிஅனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளை நாம் இங்கேமீண்டும் இயற்றி, அவரது ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்க இருக்கிறோம். அதற்காகத்தான் இன்றைக்கு இந்தச் சிறப்புக் கூட்டம்கூட்டப்பட்டுள்ளது.

மக்களாட்சித் தத்துவத்தின்படி, மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைமிக்க ஒருஅரசால், மாநில நலன் கருதி சட்டமன்றத்தில்நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்குஒப்புதல் தர வேண்டியது ஆளுநர் அவர்களின் கடமை. அவருக்கு அதில் சட்டரீதியாக அல்லது நிர்வாகரீதியாக ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், அதனை அவர் அரசிடம் கோரலாம். அதனை அரசுவழங்கவேண்டும். அந்த வகையில் இதற்கு முந்தையசில நிகழ்வுகளில் அவர் எழுப்பிய சில வினாக்களுக்குமுறையாக எழுத்து மூலமாகவும், சம்மந்தப்பட்ட அரசுசெயலர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரிலும் விளக்கம் அளித்துள்ளனர். எந்த ஒருநிகழ்விலும் அவர் கோரிய விளக்கங்கள் அவருக்குவழங்கப்படாமல் இருந்ததில்லை.

இந்தச்சூழ்நிலையில் அவர் தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகளின் அடிப்படையில், சட்டமன்றப்பேரவையினால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சிலசட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் திருப்பிஅனுப்பி வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டுமக்களையும், இந்த சட்டமன்றத்தையும் ஆளுநர்அவர்கள் அவமதிக்கின்றார் என்றுதான் பொருளாகும். 10 சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட 12 சட்டமுன்வடிவுகள் மற்றும்வேறு சில கோப்புகளுக்கும் இவர் ஒப்புதல்வழங்காமல் இருப்பது சட்டவிரோதம் ஆகும். ஜனநாயக விரோதம் ஆகும். மக்கள் விரோதம் ஆகும்.மனச்சாட்சி விரோதம் ஆகும்.

தமிழ்நாட்டுக்கு ஆளுநராக இருப்பவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கவேண்டும்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்குத்தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும். ஒன்றிய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்கானநிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம்; ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைப் பெற்றுத்தரலாம்; எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியைவாங்கித் தரலாம்; புதிய ரயில்வே திட்டங்களைப்பெற்றுத் தரலாம்; மாநில ஆட்சிக்கும், ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால், இதில்எதையும் செய்யாமல், மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும்யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார்.

அதோடு, தினந்தோறும் யாரையாவது கூட்டிவைத்துக் கொண்டு அவர் வகுப்பு எடுக்கிறார். வகுப்பு எடுக்கட்டும், தவறில்லை. அதில் மொத்தமும் தவறான பாடங்களைச் சொல்லித்தந்து கொண்டு இருக்கிறார். விழாக்களுக்குச் செல்கிறார். செல்லட்டும். ஆனால்விதண்டாவாதக் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

அரசின் கொள்கைகள் குறித்து பொதுவெளியில் விளக்கம் அளிப்பதும் - விவாதம் செய்வதும் அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிடகொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது.

பொதுமேடைகளில் அவர் நமது தமிழ்ப்பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்குஎதிரான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.அவரது அபத்தமான கருத்துகளுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் மறுப்பு செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு வருகிறார்கள்.

அவர் தெரிவிக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது அவருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்துக்குமான பிரச்னை என்பது நாம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களில் மட்டுமல்ல சமூகநீதியாகவும் இருக்கிறது. அதனால் தான் முடிந்தளவு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அவருக்கு முடிந்த வரை - அனைத்து வகையிலும் உணர்த்தினோம்.

தமிழ்நாடு வளர்ந்திருப்பதை - வளர்வதைக் காணப்பொருக்காத காரணத்தினால்தான் என்னவோ, ஆளுநர் அவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார் என்று நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

அரசியல் சட்டத்திற்கு முழுவதும் மாறாக, அரசுடன் ஆளுநர் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். எனவே, அவருக்கு உரிய அறிவுரைகளைவழங்க வேண்டும்” என்று இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் அவர்களை நேரில்சந்தித்து இக்கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தியுள்ளார்கள். நானும் இந்தியபிரதமர் அவர்களுக்கு இப்பிரச்சினை குறித்து கடிதமும் எழுதியுள்ளேன். இந்த அனைத்துமுயற்சிகளும் எவ்வித பயனும் தராததால்தான், தமிழ்நாடு அரசு மாண்பமை உச்சநீதிமன்றத்தின்கதவுகளை தட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆளுநர் அவர்களிடம் தேங்கிக் கிடக்கும்அனைத்துக் கோப்புகள், சட்டமுன்வடிவுகள்உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, உச்சநிதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்குதொடர்ந்தது. தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களைக் கவனித்துக் கேட்ட உச்சநீதிமன்றம் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்தகருத்துகள், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கிடைத்தவெற்றியாகும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் இத்தருணத்தில், ஆளுநர் அவர்கள்அவசர அவசரமாக 10 சட்டமுன்வடிவுகளுக்கு எவ்விதஒப்புதலும் வழங்காமல், கடந்த 13-11-2023 அன்று கோப்புகளைத் திருப்பிஅனுப்பியுள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குத்தான் முழு அதிகாரமும் முதன்மையும்வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பிரிவு 200-ன்படி, இந்தசட்டமுன்வடிவுகளை மீண்டும் பரிசீலித்து, ஆளுநர் அவர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கும்அதிகாரம் இந்த மாமன்றத்திற்குத்தான் உள்ளது. அந்த அடிப்படையில்தான், இந்த 10 சட்டமுன்வடிவுகளும் இன்றைக்கு உங்கள்முன் வைக்கப்பட்டுள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாடுமக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு இந்திய நாடு இதுவரை கண்டிராதமுன்னோடித் திட்டங்களை நிறைவேற்றி, மக்களின்எண்ணங்களில் இடம் பிடித்துள்ளது திராவிடமுன்னேற்றக் கழக அரசு. இதனை அரசியல் ரீதியாக சகித்துகொள்ள இயலாத சிலர், அரசு நிர்வாகத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல்அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநர்என்ற உயர்ந்த பதவியின் மூலமாக அரசியல் செய்யவிரும்புகிறார்கள்.

ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் - அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியது தான் மரபு ஆகும். பாஜக ஆளாத மாநிலங்களில் - ஆளுநர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். இப்போதுமாண்பமை உச்சநீதிமன்றம் தலையில் ஓங்கி குட்டுவைத்தவுடன் அவசர அவரமாக கோப்புகளை திருப்பிஅனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகம் ஆடுகின்றார் ஆளுநர். அவருக்கு தெரிந்ததை அவர் செய்கிறார். செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாம் எப்போதும்சட்டத்தின் வழி நடப்பவர்கள். எனவே, அரசியல்அமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-ன்படி அவர் எந்தக்காரணமும் குறிப்பிடாமல் திருப்பிஅனுப்பிவைத்துள்ள நான் முன்பு குறிப்பிட்ட 10 சட்ட முன்வடிவுகளையும் நிறைவேற்றித் தருமாறு நூற்றாண்டு கண்ட இச்சிறப்புமிக்க சட்டமன்றப்பேரவையின் உறுப்பினர்களை தங்கள் வாயிலாகக்கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு செக் : சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது!