Tamilnadu
”எத்தனை ED சோதனைகள் நடத்தினாலும் திமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் சுவாமிநாதன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேலு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,"பா.ஜ.க எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. எத்தனை ED,IT சோதனைகளை நடத்தினாலும் இரும்பு மனிதராக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியை இன்னும் கால் நூற்றாண்டுக்கு யாராலும் அசைக்க முடியாது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போன்றவர்களுக்கு ஆட்சி அதிகார வாய்ப்பை எந்நாளும் தமிழ்நாட்டு மக்கள் வழங்க மாட்டார்கள்.
தஞ்சாவூர் தேவஸ்தானத்திற்கு இதுவரை மானியமே இல்லாமல் இருந்தது. இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு ரூ.3 கோடிக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கோவில்களில் அன்னதான திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!
-
”சிஎஸ்கே-வில் மீண்டும் ரெய்னா, பிராவோ, முரளி விஜய்... களைகட்டப்போகும் சேப்பாக்கம்” - முழு விவரம்!
-
“பழனிசாமி ஒரு நன்றிகெட்ட அரசியல்வாதி” : ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு!
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!