Tamilnadu
”எத்தனை ED சோதனைகள் நடத்தினாலும் திமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் சுவாமிநாதன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேலு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,"பா.ஜ.க எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. எத்தனை ED,IT சோதனைகளை நடத்தினாலும் இரும்பு மனிதராக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியை இன்னும் கால் நூற்றாண்டுக்கு யாராலும் அசைக்க முடியாது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போன்றவர்களுக்கு ஆட்சி அதிகார வாய்ப்பை எந்நாளும் தமிழ்நாட்டு மக்கள் வழங்க மாட்டார்கள்.
தஞ்சாவூர் தேவஸ்தானத்திற்கு இதுவரை மானியமே இல்லாமல் இருந்தது. இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு ரூ.3 கோடிக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கோவில்களில் அன்னதான திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!