Tamilnadu
”எத்தனை ED சோதனைகள் நடத்தினாலும் திமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
தமிழறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் சுவாமிநாதன், மா. சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வேலு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,"பா.ஜ.க எத்தனை குட்டிக்கரணங்கள் அடித்தாலும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. எத்தனை ED,IT சோதனைகளை நடத்தினாலும் இரும்பு மனிதராக இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சியை இன்னும் கால் நூற்றாண்டுக்கு யாராலும் அசைக்க முடியாது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போன்றவர்களுக்கு ஆட்சி அதிகார வாய்ப்பை எந்நாளும் தமிழ்நாட்டு மக்கள் வழங்க மாட்டார்கள்.
தஞ்சாவூர் தேவஸ்தானத்திற்கு இதுவரை மானியமே இல்லாமல் இருந்தது. இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு ரூ.3 கோடிக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கோவில்களில் அன்னதான திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!