Tamilnadu
”துரோகியே திரும்பி போ” : பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழுந்த கோஷம்!
முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை என பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பசும்பொன் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அளவில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். அப்போதும் அங்கு கூடியிருந்தவர்கள் கடுமையான எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். 'துரோகியே திரும்பிப்போ என்றும், தேர்தல் ஆதாயத்திற்காக இங்கே வராதே' என்றும் அவர்கள் முழக்கங்கள் செய்தனர்.
இதையடுத்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் எந்தவித எதிர்வினையும் ஆற்ற முடியாமல் மவுனமாக அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!