Tamilnadu
”துரோகியே திரும்பி போ” : பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எழுந்த கோஷம்!
முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை என பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பசும்பொன் வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும் அளவில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். அப்போதும் அங்கு கூடியிருந்தவர்கள் கடுமையான எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். 'துரோகியே திரும்பிப்போ என்றும், தேர்தல் ஆதாயத்திற்காக இங்கே வராதே' என்றும் அவர்கள் முழக்கங்கள் செய்தனர்.
இதையடுத்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் எந்தவித எதிர்வினையும் ஆற்ற முடியாமல் மவுனமாக அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!