Tamilnadu
"மோடி ஆட்சியில் ஜனநாயகமும் மதச்சார்பின்மையும் அச்சுறுத்தப்படுகிறது" : இந்து என்.ராம் ஆவேசம்!
முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை வ.உ.சி மைதானத்தில் "இதழாளர் - கலைஞர்” புகைப்பட கண்காட்சியைப் பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் முத்துச்சாமி, சாமிநாதன், செஞ்சி மஸ்தான் மற்றும் தி இந்து என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தி இந்து என்.ராம், "அரசியலில் கலைஞர் சாதித்ததை விட எந்த மூத்த தலைவர்களும் சாதித்ததாக தனக்குத் தெரியவில்லை. கலைஞருக்குப் பல திறமைகளுக்கு இருந்தது என்பதை இந்த கண்காட்சி நன்றாக எடுத்துக் கூறுகிறது. கலைஞர் பேச்சு சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் மதித்தார்.
பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகள் எப்போது வேண்டுமானாலும் கலைஞரை பார்க்கச் செல்லலாம். செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் அமைதியாக நிதானமாகப் பதில் சொல்வார். எதற்காக மாநில சுயாட்சி வேண்டும் என பல கட்டுரைகள் எழுதியுள்ளார். நேர்காணல்கள் கலைஞர் கொடுத்துள்ளார்.
ஆனால் இன்றைக்குக் கருத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் இந்தியாவில் அபாயத்தில் உள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என்னென்னவோ பேசுகிறார் அவர் மீது வழக்குப் பதிவு செய்கிறார்களா?. நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தி உபா சட்டம் போடப்பட்டுள்ளது. இதை நாம் எதிர்க்க வேண்டும். மதச்சார்பின்மை ஜனநாயகம் இன்று ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதை நாம் பாதுகாக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!
-
5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்கள்…அனைத்து தரப்பினருக்குமானது திராவிட மாடல் ஆட்சி: துணை முதலமைச்சர் பேச்சு!
-
சாலைப் பயணத்திற்கு இனி கவலை இல்லை… ரூ.1,843.85 கோடி செலவில் 11 சாலைகள்: திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
ரூ.211.90 கோடியில் 45 முடிவுற்ற, ரூ.53.76 கோடியில் 9 புதிய திட்டப் பணிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!