Tamilnadu
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி பண மோசடி : பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலிஸ்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள விவேகானந்த நகரைச் சேர்ந்தவர் எஸ்.அர்ஜூன் கார்த்திக். இவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகப் பொது மக்களிடம் கூறியுள்ளார். மேலும் கிரிப்டோ கரன்சி ஆலோசனை நிறுவனத்தையும் நடித்து வந்துள்ளார்.
இதனால் பலர் இவரிடம் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் சில மாதங்கள் மட்டுமே தனது வாடிக்கையாளருக்கு மாதத் தொகையை அர்ஜூன் கார்த்தி வழங்கி வந்துள்ளார். பிறகு தொகை வழங்குவதை நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது ரூ.50 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அர்ஜூன் கார்த்தி மற்றும் அவரது அலுவலகத்தில் வேலைபார்த்த அவிலா, ராஜா, செல்வக்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
மேலும் அர்ஜூன் கார்த்தியிடம் நடத்திய விசாணையில், மேலும் சில தகவல்கள் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதில் பா.ஜ.க கட்சியின் மாவட்ட ஒ.பி.சி அணி செயலாளர் சாக்கோட்டை கார்த்தி என்பவர் அர்ஜூன் கார்த்தியை மிரட்டிப் பல கோடி பறித்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த சாக்கோட்டை கார்த்தியை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கிரிப்டோ கரன்சி மோசடியில் இன்னும் பலருக்கும் தொடர்பு இருக்கும் என்பதால் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!