Tamilnadu
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாக கூறி பண மோசடி : பா.ஜ.க நிர்வாகி உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலிஸ்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள விவேகானந்த நகரைச் சேர்ந்தவர் எஸ்.அர்ஜூன் கார்த்திக். இவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகப் பொது மக்களிடம் கூறியுள்ளார். மேலும் கிரிப்டோ கரன்சி ஆலோசனை நிறுவனத்தையும் நடித்து வந்துள்ளார்.
இதனால் பலர் இவரிடம் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். பின்னர் சில மாதங்கள் மட்டுமே தனது வாடிக்கையாளருக்கு மாதத் தொகையை அர்ஜூன் கார்த்தி வழங்கி வந்துள்ளார். பிறகு தொகை வழங்குவதை நிறுத்தியுள்ளார்.
இதையடுத்து பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது ரூ.50 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அர்ஜூன் கார்த்தி மற்றும் அவரது அலுவலகத்தில் வேலைபார்த்த அவிலா, ராஜா, செல்வக்குமார் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
மேலும் அர்ஜூன் கார்த்தியிடம் நடத்திய விசாணையில், மேலும் சில தகவல்கள் போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதில் பா.ஜ.க கட்சியின் மாவட்ட ஒ.பி.சி அணி செயலாளர் சாக்கோட்டை கார்த்தி என்பவர் அர்ஜூன் கார்த்தியை மிரட்டிப் பல கோடி பறித்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த சாக்கோட்டை கார்த்தியை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கிரிப்டோ கரன்சி மோசடியில் இன்னும் பலருக்கும் தொடர்பு இருக்கும் என்பதால் போலிஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
மீண்டும் மீண்டும் மக்களை அவதிக்குள்ளாக்கும் த.வெ.க : வரவேற்பு கொண்டாட்டத்தால் போக்குவரத்து நெரிசல்!
-
“இன்று மகளிரின் நம்பிக்கையாக திகழும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” : முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!
-
ரூ.1000 வரவு வைத்தது தவெக அரசு : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே நிலைத்து நிற்கும்!
-
“இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல”: மீண்டும் பிற்போக்குவாதிகளை கதறவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி
-
அ.தி.மு.க ஆதரவு : “ஊழல் சக்திகள் தயவில் விஜய் ஆட்சி!...” -வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!