Tamilnadu
”மாநிலக் கல்விக் கொள்கை விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும்” : அமைச்சர் பொன்முடி தகவல்!
2019ம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க அரசு தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கியது. இதற்கு மாநில அரசுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதை மாற்றி 3,5,8,10,12 ஆகிய வகுப்புகளை பொதுத் தேர்வாக மாற்றுவதன் மூலமாகப் படிக்க வருபவர்களை வடிகட்டி, வெளியில் அனுப்பப் பார்க்கிறார்கள்.
இடைநிற்றல் என்பது மிகமிக அதிகம் ஆகிவிடும். தகுதியைப் பரிசோதிப்பதாகச் சொல்லி தகுதி நீக்கம் செய்யும் தந்திரம் இது என அரசியல் கட்சிகள் பலவும் வலியுறுத்தின. மேலும் மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அதனடிப்படையில் தான் தேசிய கல்விக் கொள்கைக்குப் பதிலாக மாநில கல்விக் கொள்கை உருவாக்க உயர்மட்டக்குழு 2022ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இக்குழு ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் கருத்துக்களைக் கேட்டுப் பெற்றது. இந்நிலையில் மாநிலக் கல்விக் கொள்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், விரைவில் முதலமைச்சரிடம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!