Tamilnadu
“எந்த காலத்திலும் இஸ்லாமியர்களின் வாக்கு பாஜகவிற்கு கிடையாது..!” - காதர் மொய்தீன் பேச்சு !
சென்னை இராயபுரத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரை இயக்கத்தின் தலைமை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கும் என தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், "இந்த பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து சில தீர்மானங்கள் முடிவு எடுத்து உள்ளோம். முதல் தீர்மானமாக திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரவ வேண்டும் எனும் அடிப்படையில் எங்களது பணியினை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றோம்.
வரும் நவம்பர் 14 ஆம் தேதி டெல்லி கள்கோத்திரா ஸ்டேடியத்தில் இந்தியின் யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளனர்.
'இந்தியா' என்றும் பெயரில் கூட்டணி அமைத்து, பாஜக ஆட்சியை அகற்றி அனைவருக்கும் அனைத்தும் எனும் நல்லாட்சியை ஒன்றியத்தில் கொண்டு வர வேண்டும் என இந்தியா கூட்டணியில் அனைவரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்தியா கூட்டணி உருவான நாள் முதலே பிரதமர் நரேந்திர மோடி பெரும் குழப்பத்தில் இருக்கின்றார். அவரது ஆட்சி பறிபோகிறது என அவரே சொல்வது போல் உளறி கொண்டு இருக்கின்றார்கள்.
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். இதுவரை வேலூர், தேனி, மயிலாடுதுறை, வட சென்னை, இராமநாதபுரம் என 5 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளோம். இஸ்லாமிய சமுதாய வாக்கு பாஜகவிற்கு இல்லாமல் போனதுக்கு காரணம், இஸ்லாமியர்களை இந்தியர்களாக பா.ஜ.க பார்ப்பதில்லை.
நாடாளுமன்ற தேர்தல்களில் இஸ்லாமியர்களுக்கு பா.ஜ.க எப்போதும் சீட் வழங்கியது இல்லை. இஸ்லாமியர்களின் வாக்கு எங்களுக்கு தேவையில்லை என வெளிப்படையாகவே பா.ஜ.க தலைவர்கள் கூறுகின்றனர். எந்த காலத்திலும் இஸ்லாமியர்களின் வாக்கு பாஜகவிற்கு கிடையாது." என்றார்.
Also Read
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!