Tamilnadu
சாலையில் மயங்கி கிடந்த உணவு டெலிவரி இளைஞர்.. தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர் மா.சு!
சென்னை மதுரவாயில் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரது கார் மேற்கு சி.ஐ.டி நகர் அருகே சென்றபோது பொதுமக்கள் சிலர் கூட்டமாகச் சாலையில் நின்று கொண்டிருந்தனர். உடனே காரை நிறுத்தி அங்குச் சென்று அமைச்சர் விசாரணை செய்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த உணவு டெலிவரி இளைஞர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தது தெரியவந்தது.
உடனே பொதுமக்கள் உதவியுடன் இளைஞரை மீட்டு தனது காரி ஏற்றி கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். பின்னர் வேறு காரில் ஏரி அமைச்சர் அங்கிருந்து சென்றார்.
இதையடுத்து மருத்துவமனையைத் தொடர்புகொண்டு இளைஞரின் உடல் நிலை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியனின் இந்த செயலுக்குப் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!