Tamilnadu
இறப்பிலும் பிரியாத தம்பதி.. கணவன் இறந்த உடலைப் பார்த்து மனைவியும் உயிரிழப்பு!
மயிலாடுதுறை மாவட்டம், நில்லத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி மருதாம்பாள். இந்த தம்பதிக்குத் திருமணமாகி 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இவர்களுக்குத் திருமணம் நடந்த நாளிலிருந்து இணை பிரியாமல் ஒன்றாக தங்களது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது கணவன் உடலைப் பார்த்து மனைவி மருதாம்பாள் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தார்.
அப்போது அவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று பரிசோதனை செய்தபோது அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரது உடலுக்கும் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து தம்பதிகள் உயிரிழந்தது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!