Tamilnadu
இறப்பிலும் பிரியாத தம்பதி.. கணவன் இறந்த உடலைப் பார்த்து மனைவியும் உயிரிழப்பு!
மயிலாடுதுறை மாவட்டம், நில்லத்துக்குடி சிவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி மருதாம்பாள். இந்த தம்பதிக்குத் திருமணமாகி 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இவர்களுக்குத் திருமணம் நடந்த நாளிலிருந்து இணை பிரியாமல் ஒன்றாக தங்களது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இவரது இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது கணவன் உடலைப் பார்த்து மனைவி மருதாம்பாள் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தார்.
அப்போது அவர் மயங்கி விழுந்துள்ளார். அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று பரிசோதனை செய்தபோது அவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரது உடலுக்கும் இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து தம்பதிகள் உயிரிழந்தது உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!