Tamilnadu
பெண்ணை காலால் எட்டி உதைத்த பா.ஜ.க நிர்வாகி சாவர்க்கர்.. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்: போலிஸ் விசாரணை!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுக்கும் சொத்து தொடர்பாகப் பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் அதேபகுதியைச் சேர்ந்த பா.ஜ.க ஒன்றிய கவுன்சிலரான சாவர்க்கர் மற்றும் மெதுகும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது சரோஜாவுக்கும் இவர்களுக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது.
அப்போது பா.ஜ.க ஒன்றிய கவுன்சிலர் சாவர்க்கர் தனது காலால் சரோஜாவை எட்டி உதைத்துள்ளார். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.
இதையடுத்து போலிஸாரிடம் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து சாவர்க்கர், சசிகுமார், ராஜேஷ், சபிமோள் ஆகிய நான்கு பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துக் கூறும் சரோஜா, "கடந்த பல ஆண்டுகளாக சாவர்க்கர் தன்மீது விரோதம் கொண்டு அவ்வப்போது பிரச்சனையில் ஈடுபட்டு வந்தார். தற்போது சபி மோளுக்கும் தனக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் சாவர்க்கர் புகுந்து தன்னை கொடூரமாகத் தாக்கியதில் தனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தனக்கு காவல்துறை உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!
-
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துலாம் தேவை இல்ல... - நெத்திப்போட்டில் அடித்த ஒன்றிய பாஜக அரசு! - விவரம்!
-
மகளிர் இட ஒதுக்கீடு : “வரவேற்றாலும், எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம்!” - அதிரடி காட்டிய முதலமைச்சர்!