Tamilnadu
காவிரி விவகாரம்.. "மெத்தனமாக செயல்படும் காவிரி மேலாண்மை ஆணையம்".. அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு!
டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா காணொளி காட்சியில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாகச் செயல்படுவதாகத் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "நேற்று நடந்த காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பயிர்களைக் காப்பாற்ற விநாடிக்கு 24000 கன அடி நீர் வீதம் 10 நாட்களுக்குத் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கர்நாடக அரசு 5000 கன அடி நீர் திறப்பதாகவும், காவிரி ஒழுங்கு முறை ஆணையம் 7000 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்துள்ளது. காவிரி நீர் அதிகம் இருக்கும் போது எவ்வாறு பங்கீடு செய்ய வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. ஆனால் நீர் தட்டுப்பாடு உள்ள நேரத்தில் நீரை எவ்வாறு பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்ற வரையறை இல்லை. இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மெத்தனமாகச் செயல்படுகிறது. இதனையும் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலுவாக எடுத்து வைக்கும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!