Tamilnadu
அதிகாலையில் நடந்த கொடூரம்.. தலைகுப்புற கவிழ்ந்த சொகுசு பேருந்து : 2 பயணிகள் உடல் நசுங்கி பலி!
புதுச்சேரியில் இருந்து கோவை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 29 பேர் பயணம் செய்துள்ளனர். இந்தப் பேருந்து இன்று அதிகாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே காளசமூத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் பேருந்தின் வலது புறம் அமர்ந்திருந்த ஒரு பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கை,கால் இழந்த 7 பேர் மேல் சிகிச்சைக்காகச் சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் சொகுசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!