Tamilnadu

முதலாம் ஆண்டு திருமண நாளில் மனைவி தற்கொலை.. மனமுடைந்த கணவன்: அடுத்து நடந்த விபரீதம்!

சென்னை செங்குன்றம் அடுத்த தண்டல் கழனி வடிவுடையம்மன் நகர் பட்டுக்கோட்டை அழகிரி தெருவைச் சேர்ந்தவர் அமிர்த குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி நிவேதா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்குத் திருமணம் நடந்து முதலாம் ஆண்டு திருமண நாளில் கணவரை வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும்படி மனைவி நிவேதா வலியுறுத்தியுள்ளார். ஆனால் கணவர் அன்றைக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த நிவேதா இரண்டு நாட்களுக்குப் பிறகு வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த அமிர்த குமார் யார் உடனும் பேசாமல் இருந்த வந்துள்ளார்.

இதையடுத்து நேற்று நள்ளிரவு தனது வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இதுபற்றி அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. பாதுகாப்பு படை முகாமில் இருந்து 19 ஆயிரம் துப்பாக்கி குண்டுகள் கொள்ளை!