Tamilnadu
சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்ட வழக்கு: அதிமுக எம்எல்ஏ-க்கு செக் வைத்த ஐகோர்ட்!
சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் அரவிந்தக்க்ஷன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன், சென்னை தி. நகர் தொகுதியில் 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் 2021 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து மதிப்பு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என கூறியதாக தெரிவித்துள்ளார்.
சட்டத்துக்கு புறம்பாக தனது சொத்து கணக்கை மறைத்து மனைவி மற்றும் மகள் பெயரில் வாங்கிய சொத்துக்களை மறைத்துள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை வெளியீடுமாறு கேட்டபோது, அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் என தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.
எனவே தனது சொத்து மதிப்பை மறைத்து சத்தியா தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, புகார் ஆரம்பகட்ட விசாரணை முடித்து,முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணையை 2 மாதங்களில் முடிக்க லஞ்ச ஒழிப்புத்துறை க்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
Also Read
-
”சொந்தக் கட்சிக்காரர்களாலேயே நிராகரிக்கப்பட்ட பழனிசாமி” : முரசொலி!
-
காசா நகரின் 40% பகுதிகளை கைப்பற்றிவிட்டோம், மீதம் இருக்கும் பகுதி விரைவில்... - இஸ்ரேல் அறிவிப்பு !
-
"தமிழ்நாட்டில் பெயர்களுக்கு பின்னால் சாதி இல்லை, பட்டம்தான் உள்ளது" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !