Tamilnadu
” 5 நாட்கள் தக்காளி வாங்கவில்லை என்றால் தானாக விலை குறைந்து விடும்”.. எச்.ராஜா சொல்லும் பலே ஐடியா!
பருவமழை காரணமாக இந்தியா முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ரூ.200க்குக் கூட தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
இப்படி கடுமையாகத் தக்காளி விலை உயர்ந்துள்ளது ஏழை, எளிய மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மேலும் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தக்காளி விலையைத் தொடர்ந்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த இது வரை ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையில் பா.ஜ.க நிர்வாகிகள் விலை உயர்வு குறித்து அபத்தமான கருத்துக்களைக் கூறி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அசாம் மாநில பா.ஜ.க முதலமைச்சர், காய்கறிகளின் விலை உயர்வுக்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, "பொதுமக்கள் 4,5 நாட்களுக்குத் தக்காளி வாங்கப் போகவில்லை என்றால் தானாகவே தக்காளி விலை குறைந்து விடும்" என தெரிவித்துள்ளார். இவரின் இந்த ஆலோசனையைப் பார்த்து குடும்பத் தலைவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இவர் எப்படி ஒரு கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார்?. பொதுமக்களின் கஷ்டங்கள் கூட இவருக்குத் தெரியாமல் ஏதாவது உளறுவதா? என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
இதுபோன்ற பிரதமர் நமக்கு வேண்டாம்... சிந்தித்து வாக்களியுங்கள் - பட்டியலிட்டு மோடியை விமர்சித்த துருவ் ரதீ
-
சட்டையை மாற்றி பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... “தேர்தல் ஆணையம் விழித்துக்கொள்ளுமா?” - குவியும் கண்டனம்!
-
“பாஜகவிடம் இருந்து அனைத்தையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது” - தேஜஸ்வி தாக்கு !
-
பாஜகவுக்கு 8 முறை கள்ள ஓட்டு... பாஜக ஆளும் உ.பி-யில் இளைஞர் செய்த செயலால் அதிர்ச்சி... வீடியோ வைரல் !
-
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு.. பாஜக ஆதரவாளரை கைது செய்த கர்நாடக போலிஸ்... கொந்தளிக்கும் பாஜக தலைவர்கள்!