Tamilnadu
”தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை”.. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டிய அ.தி.மு.க நிர்வாகி!
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உள்ள நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மணவாள நகர் பகுதி தனியார் திருமண மண்டபம் எதிரே சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி வேறு இடத்தில் அமைக்கப்பட்டது.
இந்தப் பணி நெடுஞ்சாலை ஆய்வாளர் சீனிவாசன் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கடம்பத்தூர் ஒன்றிய முன்னாள் அ.தி.மு.க செயலாளர் சந்திரசேகர் என்பவர் தனது இடத்தின் அருகே டிரான்ஸ்பார்மரை வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசனைப் பார்த்து, "தொலைச்சிடுவேன் உன்னை. இராவும், பகலும் கல் எடுத்து அடிப்பார்கள்.எங்க போய் நீ என்ன சொன்னாலும் என்ன ஒன்றும் செய்ய முடியாது" என மிரட்டியுள்ளார்.
தற்பொழுது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் அ.தி.மு.க நிர்வாகி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!