Tamilnadu
”தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை”.. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டிய அ.தி.மு.க நிர்வாகி!
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை உள்ள நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் மணவாள நகர் பகுதி தனியார் திருமண மண்டபம் எதிரே சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது இடையூறாக உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி வேறு இடத்தில் அமைக்கப்பட்டது.
இந்தப் பணி நெடுஞ்சாலை ஆய்வாளர் சீனிவாசன் மேற்பார்வையில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கடம்பத்தூர் ஒன்றிய முன்னாள் அ.தி.மு.க செயலாளர் சந்திரசேகர் என்பவர் தனது இடத்தின் அருகே டிரான்ஸ்பார்மரை வைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மேலும், நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாசனைப் பார்த்து, "தொலைச்சிடுவேன் உன்னை. இராவும், பகலும் கல் எடுத்து அடிப்பார்கள்.எங்க போய் நீ என்ன சொன்னாலும் என்ன ஒன்றும் செய்ய முடியாது" என மிரட்டியுள்ளார்.
தற்பொழுது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் அ.தி.மு.க நிர்வாகி மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!