Tamilnadu
”இம்மாதம் இறுதிக்குள் ஒன்றிய அரசே ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கும்”.. ஆர்.எஸ்.பாரதி திட்டவட்ட தகவல்!
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சிவகிரியில் வாசுதேவ நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமை கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றி கொண்டான், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ராஜா எம்.எல்.ஏ உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அதிகார அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். அமைச்சரவையில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யும் அதிகாரம் முதலமைச்சருக்குத்தான் உண்டு. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
ஆனால் அவர் தி.மு.க அரசுக்கு எதிராக வேண்டும் என்றே செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டில் எந்த ஆளுநர் வந்தாலும் நமது முதலமைச்சரை ஒன்றும் செய்ய முடியாது. தி.மு.க போட்ட வழக்குகள் ஒருபோதும் தோற்றது கிடையாது. இந்த மாத இறுதிக்குள் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என் ரவியை ஒன்றிய அரசு நீக்கம் செய்யும். புதிய ஆளுநரை ஒன்றிய அரசே நியமனம் செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
நிலத்தை சமன் செய்யும்போது கிடைத்த 1 இல்ல 2 இல்ல... 86 தங்க நாணயங்கள்... திருப்பத்தூரில் நடந்தது என்ன?
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!