Tamilnadu
100க்கும் அதிகமான பெண்கள்,ஆபாச படங்கள்: தமிழகத்தை உலுக்கிய நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தங்கபாண்டியனின் மகன்தான் காசி (29). இவர் மீது, கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த இளம்பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினர், காசி கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரிக்கையில், வசதியான இளம்பெண்களை குறிவைத்து அவர்களுடன் நட்பாக பழகி, பின்னர் காதலித்து ஏமாற்றியுள்ளார். மேலும் அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள், புகைப்படங்கள் என எடுத்து வைத்துக்கொண்டு சில நாட்கள் கழித்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இதில் சில பெண்களை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளது தெரியவந்தது.
இப்படி தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் இளம்பெண்கள் மட்டுமின்றி பள்ளி சிறுமிகளை காசி விடவில்லை. இதையடுத்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து காசியின் நண்பர்களான தினேஷ் கௌதம், டேசன் ஜினோ ஆகியோரும் கைது செய்யப்பட்டதோடு, இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்த காரணத்தாலும், சாட்சியங்களை கலைக்க முயன்ற காரணத்தாலும் காசியின் தந்தை தங்கபாண்டியன் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டிற்கு பின் பிணையில் வெளிவந்தார். தொடர்ந்து இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட காசி, குற்றாவளி என நிரூபணம் ஆனதால், அவருக்கு இந்திய தண்டனை சட்டம் ஐபிசி 376(2) என் பிரிவின் கீழ் சாகும்வரை ஆயுள் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார்.
Also Read
-
“இவ்வளவுக்குப் பிறகும் மவுனமாக ஏன் இருக்கிறது? கர்நாடக அரசைப் பார்த்து பயமா?” - விஜய்க்கு முரசொலி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் தரம் தாழ்ந்து பேசாதீங்க”... : அமைச்சர் நிர்மல்குமாருக்கு கே.என்.நேரு பதிலடி!
-
த.வெ.க அரசு எந்தத் திசையில் செல்கிறது? : சர்ச்சை சுற்றறிக்கை - தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
வெளியாகும் சுற்றறிக்கை.. திரும்பப்பெறும் தவெக அரசு?.. முதல்வரை மிஞ்சிய சூப்பர் பவர் யார்? : திமுக கேள்வி!
-
“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!