Tamilnadu
'நான் யார் தெரியுமா?'.. குடிபோதையில் பெண் காவலரிடம் தகராறு செய்த பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவின் மகன்!
பா.ஜ.க கட்சியின் நிர்வாகியாக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் அ.தி.மு.கவில் இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பிறகு அ.தி.மு.கவில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். இவரது மகன் பிரதீப் ராஜா. இவர் சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பிரதீப் ராஜா நேற்று குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் விருகம்பாக்கம் வழியாகச் சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்ற ஆட்டோ ஓட்டுநருடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் பிரதீப் ராஜாவிடம் விசாரணை நடத்தினார். இதற்கு அவர் நான் யார் தெரியுமா? என பெண் காவலரிடம் தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்ததற்காக அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பெண் காவலரைத் தாக்க முயன்றார். இது பற்றி அறிந்து அங்கு வந்த சக போலிஸார் பிரதீப் ராஜாவை அங்கிருந்து காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !