Tamilnadu
'நான் யார் தெரியுமா?'.. குடிபோதையில் பெண் காவலரிடம் தகராறு செய்த பாஜக நிர்வாகி சசிகலா புஷ்பாவின் மகன்!
பா.ஜ.க கட்சியின் நிர்வாகியாக இருப்பவர் சசிகலா புஷ்பா. இவர் அ.தி.மு.கவில் இருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பிறகு அ.தி.மு.கவில் இருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தார். இவரது மகன் பிரதீப் ராஜா. இவர் சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பிரதீப் ராஜா நேற்று குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் விருகம்பாக்கம் வழியாகச் சென்றுள்ளார். அப்போது சாலையில் சென்ற ஆட்டோ ஓட்டுநருடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது அங்கிருந்த போக்குவரத்து காவலர் பிரதீப் ராஜாவிடம் விசாரணை நடத்தினார். இதற்கு அவர் நான் யார் தெரியுமா? என பெண் காவலரிடம் தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து அவர் குடித்து விட்டு வாகனம் ஓட்டி வந்ததற்காக அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பெண் காவலரைத் தாக்க முயன்றார். இது பற்றி அறிந்து அங்கு வந்த சக போலிஸார் பிரதீப் ராஜாவை அங்கிருந்து காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
Also Read
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!
-
“சிபிஎஸ்இ-யில் 3-வது மொழி தேர்ச்சி கட்டாயம்.. மொழித் திணிப்பின் உச்சம்” : தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்!