Tamilnadu
”நானும் 10ம் வகுப்பு fail.. ஆனா இப்போது கலெக்டர்”: மாணவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டிய திருப்பூர் ஆட்சியர்!
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கிறிஸ்துராஜ். இவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் முதலுதவி சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, சிறப்புச் சிகிச்சைப் பிரிவுகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
அப்போது, சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளிடம் முறையாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். இப்படி ஒவ்வொரு நோயாளிகளிடம் அவர்கள் குறைகளை ஆட்சியர் கேட்டறிந்தார்.
அப்போது அனீஸ் என்ற பள்ளி மாணவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதைப்பார்த்த ஆட்சியர் ஏன் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இதற்கு அவர்கள், 10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மாணவன் தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
இதையடுத்து ஆட்சியர் கிறிஸ்துராஜ் மாணவனிடம், "நானும் 10ம் வகுப்பில் ஃபெயில் ஆகியிருக்கிறேன். பின்னர் நன்றாகப் படித்து இப்போது மாவட்ட ஆட்சியராக உள்ளேன். என்னால் முடிந்தது என்றால் உன்னாலும் முடியும்.
நீ நன்றாகப் படித்து 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும். அப்போது எனக்கு தொலைபேசியில் அழைத்துக் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்படாதே. நன்றாகப் படி" என அன்போடு அறிவுரை வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் இந்த குணத்தைப்பார்த்த அங்கிருந்த மாணவனின் பெற்றோர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!