Tamilnadu
இருசக்கர வாகனங்களை திருடி OLX இணையத்தில் விற்று வந்த கும்பல்: போலிஸாரிடம் சிக்க வைத்த CCTV காட்சிகள்!
சென்னையில் அதிகாலையில் இருசக்கர வாகனங்கள் திருடுபோவது குறித்து போலிஸாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து போலிஸார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.
மேலும் வாகனங்கள் திருடுபோன இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஏற்கனவே வாகன திருட்டு வழக்கில் சிக்கிய வேலூரைச் சேர்ந்த மெக்கானிக் வெங்கடேஷ் மற்றும் விஷ்ணுவர்தன், ரதீஷ்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலிஸார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில், திருடப்படும் வாகனங்களை OLX போன்ற இணையத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதற்காக பழைய வாகனங்களை வாங்கி அதன் ஆவணத்தைப் போலியாகத் தயாரித்துத் திருடப்பட்ட வாகனங்களில் இணைத்து விற்பனை செய்துள்ளனர். அதோடு வாகனத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் சேசிங் என்னையும் அழித்து, திருட்டு வாகனத்தில் புதிய சேச்சிங் எண்ணை பதிவு செய்தது விற்பனை செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்த 12 இருசக்கர வாகனங்களை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கும்பல் யமஹா மற்றும் ஸ்ப்ளெண்டர் போன்ற நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பழைய மாடல் இரு சக்கர வாகனங்களையே குறிவைத்துத் திருடிவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!