Tamilnadu
குதிரை வேண்டும் என ஆசையாகக் கேட்ட மகன்.. மறுத்த தந்தை: பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் மோகன். இளைஞரான இவருக்குக் குதிரைகள்மீது அதிக பிரியம் இருந்துள்ளது. மேலும் இவர் horse riding பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனக்குச் சொந்தமாக ஒரு குதிரையை வாங்கி அதில் horse riding செல்ல வேண்டும் என நினைத்துள்ளார். இதற்காக அவரது தந்தையிடம் குதிரை ஒன்று வாங்கி கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதற்கு பாலசுப்பிரமணியம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகத் தந்தை மற்றும் மகனுக்கு இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மோகன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தூக்குட்டிக் கொண்டுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குதித்து போலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!