Tamilnadu
“என் பணியை திறம்பட செய்வேன்..” : அமைச்சராக பொறுப்பேற்ற TRB.ராஜாவின் முதல் பேட்டி - நெகிழ்ச்சி சம்பவம் !
தமிழ்நாடு அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக புதிதாக அறிவிக்கப்பட்ட, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு அமைச்சர்களும் துறை சார்ந்த அதிகாரிகளும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பி.ராஜா, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கட்டளையை ஏற்று அவரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப திராவிட மாடல் ஆட்சியின் எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்துடன் தமிழகத்தை தொடர்ந்து நம்பர் ஒன் மாநிலமாக அமைந்திட எல்லா விதத்திலும் என் பணியை திறம்பட செய்வேன் என்றார்.
மேலும், டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைய வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் துறையில் அதிகப்படியான நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்து கொண்டுள்ளார் முதலீடுகள் அதிகமாக வர வேண்டும் என்றும் கடந்த ஆட்சி காலங்களில் பல்வேறு பின்னடைவுகளை கண்ட தமிழ்நாட்டை முதலமைச்சர் மீண்டும் முன்னேற்றிக் கொண்டு வந்துள்ளார்.
பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் தொடங்குவதற்கு முதலில் வரும் மாநிலம் தமிழ்நாடு தான். ஏனென்றால் இங்கு உள்ள கட்டமைப்பும் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியும் அவரின் தொலைநோக்கு பார்வையும் தான் என்றார்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!