Tamilnadu
கலாஷேத்ரா பாலியல் விவகாரம்.. 3 உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம்.. போராட்டத்துக்கு பணிந்தது நிர்வாகம் !
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி ஒன்றிய கலாச்சார துறையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. மாணவிகள் புகாரை தொடர்ந்து அக்கல்லூரி நிர்வாகம் விசாரித்தது. ஆனால் இந்த குற்றசாட்டு உண்மையல்ல என்று கல்லூரி நிர்வாக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது.
இதனால் கலாஷேத்ராவின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன், “10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர்களால் மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்களை சந்திக்கின்றனர்” என தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த பதிவை அவர் உடனே நீக்கியுள்ளார். இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம், டி.ஜி.பி சைலேந்திர பாபுவுக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கலாஷே்ரா நிறுவனத்தின் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மாணவிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும் என மாணவிகள் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். இதனால், கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் அடையார் உதவி ஆணையர் நெல்சன் முன்னிலையில், சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமாரி தலைமையிலான போலிஸார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு கலாஷேத்ராவில் நடனம் பயின்ற முன்னாள் மாணவி ஒருவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆசிரியர் ஹரி தனக்கும் பாலியல் ரீதியாக தொந்தரவுகள் அளித்ததாக கூறி புகார் அளித்திருந்தார். தொடர்ந்து புகார்கள் குவிந்ததால் பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை கைது செய்ய முயன்றபோது, தலைமறைவாகிவிட்டார்.
இதனையடுத்து தனிப்படை அமைத்து பேராசிரியர் ஹரி பத்மனை அதிகாரிகள் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னையில் இன்று அதிகாலை பேராசிரியர் ஹரி பத்மனை தனிப்படை போலிசார் கைது செய்தனர். கடந்த 30-ம் தேதி நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு ஐதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன், திரும்ப வரவில்லை என்பதால் ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய உத்தரவு பேராசிரியர்கள் ஹரி பத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோரை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் அத்தனை கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?