Tamilnadu
ஆணழகன் போட்டிக்காக அதிகமாக ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்ட Gym Trainer: 2 கிட்னி செயலிழந்து உயிரிழப்பு!
சென்னை ஆவடி அடுத்த நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் ஆகாஷ். நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் (gym trainer ) பணியாற்றி வந்தார்.
மேலும், ஆகாஷ் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப் பெற வேண்டும் என கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்குப் பரிசோதித்தபோது, ஆகாஷ்க்கு இரண்டு கிட்னியும் செயல் இழந்தது தெரியவந்தது. . இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற ஆகாஷ் கடுமையாக உடற்பயிற்சி செய்ததுடன், அதிக அளவு சீராய்டு ஊசியைப் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இரண்டு கிட்னியும் செயல் இழந்து ஆகாஷ் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!