Tamilnadu
ஸ்பா சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில்.. 2 பெண்கள் மீட்பு - அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை!
சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை உள்ள ஆரோ பியூட்டி சலூன் அண்ட் ஸ்பா என்கின்ற ஸ்பா சென்டரில் பாலியல் தொழில் நடத்துவதாக விருகம்பாக்கம் போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலிஸார் ஸ்பா சென்டரில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இப்பொழுது ஸ்பா சென்டரில் சோதனை மேற்கொண்ட போது சென்னை புது வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெரு பகுதியை சேர்ந்த சாரதா (39) என்கின்ற பெண் ஸ்பா சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது போலிஸாருக்கு தெரிய வந்தது.
இதனை அடுத்து ஸ்பா சென்டர் உரிமையாளர் சாரதாவை விருகம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து போலிஸார் விசாரணை மேற்கொண்டார். போலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சாரதா உரிய உரிமம் பெறாமல் ஸ்பா சென்டரை நடத்தி வந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி ஸ்பா சென்டர் என்கின்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் போலிஸார் விசாரணைகள் தெரிய வந்தது. இதனை அடுத்து விருகம்பாக்கம் போலிஸார் சாரதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் விருகம்பாக்கம் போலிஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Also Read
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!