Tamilnadu
ஸ்பா சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில்.. 2 பெண்கள் மீட்பு - அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறை!
சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலை உள்ள ஆரோ பியூட்டி சலூன் அண்ட் ஸ்பா என்கின்ற ஸ்பா சென்டரில் பாலியல் தொழில் நடத்துவதாக விருகம்பாக்கம் போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலிஸார் ஸ்பா சென்டரில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இப்பொழுது ஸ்பா சென்டரில் சோதனை மேற்கொண்ட போது சென்னை புது வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெரு பகுதியை சேர்ந்த சாரதா (39) என்கின்ற பெண் ஸ்பா சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது போலிஸாருக்கு தெரிய வந்தது.
இதனை அடுத்து ஸ்பா சென்டர் உரிமையாளர் சாரதாவை விருகம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்து போலிஸார் விசாரணை மேற்கொண்டார். போலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சாரதா உரிய உரிமம் பெறாமல் ஸ்பா சென்டரை நடத்தி வந்தது தெரிய வந்தது.
அதுமட்டுமின்றி ஸ்பா சென்டர் என்கின்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் போலிஸார் விசாரணைகள் தெரிய வந்தது. இதனை அடுத்து விருகம்பாக்கம் போலிஸார் சாரதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட இரண்டு பெண்களையும் விருகம்பாக்கம் போலிஸார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!