Tamilnadu
“கோயிலுக்கு கூழ் ஊத்துறோம் Donation எடு” -திரைப்பட பாணியில் நன்கொடை கேட்டு மிரட்டிய பாஜக நிர்வாகிகள் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகுதியில் தனியார் கிரஷர் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மேலாளராக நவீன் குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை நேரத்தில்இடைச்சிவிளை ஆனந்தவிளையைச் சேர்ந்த பாஜக மாநில இளைஞரணி செயலாளரார் பூபதிபாண்டியன், திருச்செந்தூர் சரண் (எ) ஜெய ஆனந்த் ஆகிய இருவரும் இந்த நிறுவனத்திற்கு காரில் வந்துள்ளனர்.
அங்கு வந்த அவர்கள் அந்த நிறுவனத்தில் மேலாளர் நவீன் குமாரிடம் நன்கொடை கேட்டுள்ளனர். அப்போது மேலாளர் நவீன் குமார், பூபதிபாண்டியிடம் தங்களது நிறுவன உரிமையாளர் வெளியே சென்றுள்ளதாகவும், நிறுவன உரிமையாளர் வந்த பின்னர் அவரிடம் நன்கொடை வாங்கி செல்லுமாறும் கூறியுள்ளார். இருப்பினும் தொடர்ந்து அவர்கள் இருவரும் நன்கொடை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அப்போதும் நிறுவன உரிமையாளரிடம் வாங்கிக்கொள்ளுமாறு நவீன் கூறியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜக நிர்வாகிகள் பூபதிபாண்டியன், ஜெய ஆனந்த் ஆகிய இருவரும் அந்த நிறுவனத்தின் நுழைவு வாயிலில் தாங்கள் வந்த சொகுசு 2 கார்களை நிறுத்தி ரகளை செய்ய தொடங்கினர். அதோடு அங்கு வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் அங்கு பணியில் இருந்த மேலாளர் நவீன்குமார் என்பவரை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தான்குளம் போலிஸ் அதிகாரிகள், 506/1, 341, 294/B, ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கிரஷரின் முன்பு அடாவடி செய்த பூபதிபாண்டியன, ஜெய ஆனந்த் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அதோடு அந்த நிறுவனத்தின் முன் நிறுத்திவைக்கப்பட்ட அவர்களது 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
சாத்தான்குளம் அருகே தனியார் கிரஷர் ஆலையில் நன்கொடை கேட்டு தராததால் கொலை மிரட்டல் விடுத்த பாஜக மாநில இளைஞர் அணிசெயலாளர் உள்ளிட்ட இருவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு அவர்களை போலிசார் கைது செய்ததோடு அவர்களது இரு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்று பாஜகவினர் அடிக்கடி அராஜக செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவதே வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். அண்மையில் கூட திருக்கோவிலூர் பகுதியில் குடிப்பதற்காக தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பாஜக நகர செயலாளர் அறிவழகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!