Tamilnadu
"இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்க காரணம் திராவிட மாடல்": அமைச்சர் பொன்முடி பெருமிதம்
சென்னை பாரதி மகளிர் கல்லூரியின் 52-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், 1428 மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாட்டில் எந்த பள்ளிகளை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் படிக்கக் காரணம் பெரியார், அண்ணா, கலைஞர் உருவாக்கி திராவிட மாடல்தான். அரசியலுக்கானது அல்ல திராவிட மாடல். சமூக நீதிக்கானதுதான் திராவிட மாடல்.
அனைத்து பிரிவு மாணவிகளும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக மாதம் மாதம் ரூ.1000 கொடுக்கும் புதுமைப் பெண் திட்டம் உலகத்திலேயே முதன்முதலாகக் கொண்டு வந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். பாரதி மகளிர் கல்லூரி கட்டடங்கள் மற்றும் கட்டமைப்பைத் தரம் உயர்த்துவதற்கு ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
புதிய கல்விக் கொள்கையில் 3,5,8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்கிறார்கள். 3,5,8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தினால் எல்லாரும் படிப்பார்களா?. தமிழ்நாட்டுக்கு என்று மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. இருமொழி கொள்கையையே தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!
-
”வாக்கு திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” : மீண்டும் ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!