Tamilnadu
வளர்ப்பு தாயால் நரபலி அச்சம்.. பாதுகாப்பு கோரி சென்னை ஐகோர்ட்டில் மத்திய பிரதேச மாணவி மனுத்தாக்கல்!
வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால் தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்த தனக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி ஒரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி மாணவி ஷாலினி சர்மா. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விவரம் வருமாறு:-
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பைச் சேர்ந்த தனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்திரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர்.
தன்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார். ஏற்கனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலிஸில் புகாரளிக்க எவருக்கும் தைரியமில்லை.
வளர்ப்புத் தாயின் நரபலியில் இருந்து தப்பித்து, தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17ம் தேதி சென்னை வந்தேன். தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் தன்னை, குடும்பத்தினரும், ABVP அமைப்பினரும் வலுக்கட்டாயமாக என்னை போபால் அழைத்துச் சென்று விடுவர் என்ற அச்சம் உள்ளது.
தமிழ்நாடு பெண்களுக்குப் பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலிஸார் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நீதிபதி சந்திரசேகரன் முன் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!