Tamilnadu
உயிரிழந்த தோழி.. அடுத்த சில நாட்களிலேயே விபரீத முடிவெடுத்த நண்பன்: உறவினர்கள் அதிர்ச்சி!
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் செங்குன்றம் வரதராஜன் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். பட்டதாரி வாலிபரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இவர் கல்லூரி படிக்கும் போது அதே கல்லூரியில் படித்து வந்த பெண் ஒருவருடன் நண்பராகப் பழகி வந்துள்ளார். கல்லூரி முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த தோழி இறந்து விட்டார். இது பற்றி அறிந்த அசோக்கை கடுமையாக பாதித்துள்ளது. பிறகு இவர் யாருடனும் பேசாமல், அவ்வப்போது தனியாகவே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அசோக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பிறகு அங்கு வந்த போலிஸார் அசோக் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து உறவினர்களிடம் விசாணை நடத்தினர்.
இதில் தோழியாகப் பழகி வந்த பெண் திடீரென இருந்துவிட்டதால் மன உலைச்சல் அடைந்த அசோக் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோழி இறந்த துக்கத்தில் அசோக் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!