Tamilnadu
திருமணம் நடந்து 3வது நாளில் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்!
சென்னை அடுத்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கார் ஓட்டுநராக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு அண்ணாநகரைச் சேர்ந்த ஷோபனா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து இவர்கள் திருமணம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உறவினர்கள் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது. திருமணம் முடிந்ததை அடுத்து புதுமன தம்பதிகள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு விருந்துக்காக சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மணிகண்டன் தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். பிறகு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மாமியார் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது செனாய் நகர் அருகே வந்தபோது நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து மணிகண்டன் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பிறகு அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு கீழ்பாகக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மணிகண்டன் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நடந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!