Tamilnadu
'நான் பிறந்ததே பாவம்'.. பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதிவிட்டு மகன் எடுத்த விபரீத முடிவு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரன். இவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பாராமெடிக்கல் சயின்ஸ் படித்து வந்தார். மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிக் கொண்டு தினமும் வகுப்பறைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அறையில் இருந்த மாணவர்களிடம் கழிவறைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் அறைக்கு திரும்பி வரவில்லை.
இதனால் சக மாணவர்கள் கழிவறைக்குச் சென்று தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் அங்கும் அவர் இல்லை. இதனால் விடுதியின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது சுமித்ரன் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் அவரது அறையில் சோதனை செய்தபோது சுமித்ரன் எழுதிச் சென்ற கடிதம் ஒன்று போலிஸாருக்கு சிக்கியது.
அதில், "நான் எனது பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருக்கவில்லை. என்னால் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியவில்லை. உலகில் நான் பிறந்ததே பாவம். என்னை மன்னித்து விடுங்கள்." என இருந்ததாக போலிஸார் கூறுகின்றனர். மேலும் சுமித்ரன் தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்