Tamilnadu
'வாங்க நீங்க கொடி ஏத்துங்க'.. தி.மு.க கவுன்சிலரின் செயலால் நெகிழ்ந்து போன தூய்மைப் பணியாளர்!
நாட்டின் 74வது குடியரசு தினம் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தமிழ்நாட்டில் சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றிவைத்தார்.
அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர். மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குடியரசு தினத்தையொட்டி பஞ்சாப் அட்டாரி - வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் கண்டுகளித்தனர்.
இந்நிலையில், தூய்மை பணியாளரைத் தேசியக் கொடி ஏற்றவைத்துக் கவுரவித்த தி.மு.க கவுன்சிலரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புழுதிவாக்கம் 186வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் மணிகண்டன். இவர் நேற்று இந்து காலனி பூங்காவில் நடந்த சமத்துவ பொங்கல் வைத்து 74-வது குடியரசு தின விழா கொண்டாடும் நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்
அப்போது, மணிகண்டன் துய்மை பணியாளர் ராணி என்பவரை அழைத்து வந்து தேசியக் கொடியை ஏற்றவைத்து அவரை கவுரவித்தார். இதைப்பார்த்த அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சியடைந்தனர். மேலும் முதல் முறையாகத் தேசியக் கொடி ஏற்றிய மகிழ்ச்சியில் தூய்மை பணியாளர் ராணி கண்ணீர் விட்டு கவுன்சிலர் மணிகண்டனுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
'எளியவர்களின் ஏற்றமே உண்மையான நாட்டின் ஏற்றம்' என தி.மு.க கவுன்சிலர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதுதான் உண்மையான தூய்மை பணியாளர்களின் கவுரவிப்பு என்பதை தனது செயலால் தி.மு.க கவுன்சிலர் மணிகண்டன் நிரூபித்துள்ளார்.
Also Read
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!