Tamilnadu
காதலியுடன் சண்டை : நடுரோட்டில் தனக்கு சொந்தமான ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை எரித்த காதலன்!
மனிதர்களுக்குக் கோபம் வந்தால் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சில நேரங்களில் இந்த கோபம் கொலை செய்யவும் வழிவகுத்து விடுகிறது. அதனால் தான் மனிதர்கள் கோபம் அடையக் கூடாது என அடிக்கடி சொல்லப்பட்டு வருகிறது. காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் கோபம் பட்ட காதலன் ஒருவன் தனது சொந்த காரையே எரித்த கொடுமை காஞ்சிபுரம் அருகே நடந்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவின். இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு படித்து முடித்துள்ளார். படிக்கும் போது அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து தனது காதலியுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் சென்றபோது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் அடைந்த கவின் ரூ.70 லட்சம் மதிப்பில்ல தனது சொந்தமான பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதைப்பார்த்து காதலியும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!
-
சென்னை விமானநிலையம் - தனியார்மயமாக்கும் பாஜக அரசின் முயற்சிக்கு துணை போகும் தவெக: தமிழச்சி தங்கபாண்டியன்!
-
“அசிங்கப்படுவது விஜய் மட்டுமல்ல, தமிழ்நாடும்தான்” : விஜய்யின் லண்டன் பயணத்தை விமர்சித்த முரசொலி!
-
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது; தேவைப்பட்டால்...” : உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
-
பாரதிதாசன் விவகாரம் : “பொய் சொல்வதை அமைச்சர் வன்னி அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” - கோவி.செழியன் பதிலடி!