Tamilnadu
“இது மாட்டுப் பொங்கல் இல்ல.. யானைப் பொங்கல்” : வியக்க வைத்த தமிழ்நாடு வனத்துறை - குவியும் பாராட்டு !
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில், 32 யானைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கால்நடைகளுக்கு நேற்று பொங்கல் திருவிழா நடத்தப்பட்ட வந்த நிலையில், தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் கோலாகலமாக சுற்றுலா பயணிகளுடன் உற்சாகமாக யானை பொங்கல் கொண்டாடப்பட்டது.
இதில் இருளர் பழங்குடியினர் உற்சாகமாக பாரம்பரிய இசையுடன் நடமாடி பொங்கல் விழாவை கொண்டாடினர். அப்போது மாவட்ட ஆட்சியர் குடும்பத்தோடு இருளர் பழங்குடியினர் உடன் நடனமாடி உற்சாகமாக பாரம்பரிய யானைகள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அப்போது சுற்றுலா பயணிகளும் உற்சாகமாக இருளர் பழங்குடியினர் நடனமாடி பொங்கல் திருவிழாவை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை உயரதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல், கோவை மாவட்டம் கோழிகமுத்தி பகுதியில் தமிழ்நாடு வனத்துறையின் இரண்டாவது யானை வளர்ப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் 26 யானைகள் பராமரிக்கப்படுகிறது. யானைகளுக்கு பொங்கல் வைத்து நடத்தப்படுவது பலரையும் கவர்ந்துள்ளது.
Also Read
-
“பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் - இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” : தி.மு.க வலியுறுத்தல்!
-
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
-
கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!
-
வாக்களித்த மக்களை வேட்டையாடும் வழக்கத்தை பிரதமர் மோடி : பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு முரசொலி கண்டனம்!
-
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வன்முறை! : அலட்சியத்தின் உச்சத்தில் த.வெ.க அரசு!