Tamilnadu
விலை உயர்ந்த செல்போனுடன் காவல்நிலையம் வந்த 3 சிறுவர்கள்.. போலிஸாரை ஆச்சரியப்பட வைத்த சம்பவம்!
செல்போன்கள் மீது சிறுவர்களுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். நமக்கு என்று தனியாக ஒரு செல்போன் இருந்தால் நன்றாக இருக்கும் என அனைத்து சிறுவர்களுமே நினைப்பது உண்டு. ஆனால் ஒருசில சிறுவர்கள் மட்டுமே தனியாக செல்போன் வைத்துள்ளனர்.பலர் தங்களது பெற்றோர்களின் செல்போனையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாலையில் கிடந்த விலை உயர்ந்த செல்போனை அப்படியே எடுத்துச் செல்லாமல் அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முகமது பயஸ், ராபில், ஷாகித். இவர்கள் மூன்று பேரும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பள்ளி முடித்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது குளச்சல் அடுத்த உடையார்வினை பகுதியில் உள்ள சாலையில் விலை உயர்ந்த செல்போன் இருந்ததைப் பார்த்துள்ளனர். பிறகு அதை எடுத்த அவர்கள் அருகே இருந்த காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
பின்னர் அங்குக் காவல் ஆய்வாளர் கிறிஸ்டியனிடம் செல்போனை ஒப்படைத்து, 'சார் சாலையில் செல்போன் கிடந்தது. இதை சரியான உரிமையாளரிடம் ஒப்படைத்துவிடுங்க' என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
சிறுவர்களின் இந்த நல்ல குணத்தைப் பார்த்த காவல் ஆய்வாளர் கிறிஸ்டியன் அவர்களிடம் கை குலுக்கி பாராட்டி வழி அனுப்பிவைத்தார். மேலும் அப்பகுதி மக்களும் சிறுவர்களை நேர்மையைக் கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
1,256 முகாம்கள்.. 18 லட்சம் பேர் பயன்.. மக்களின் அமோக ஆதரவோடு முடிவுற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்!
-
11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கிராமக் கோயில் பூசாரிகள் மகிழ்ச்சி!
-
ஆன்மீக அன்பர்களும் இறை பற்றாளர்களும் விரும்பும் அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
-
தமிழ்நாட்டின் முதல் இரவு வான் பூங்கா : எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது? - 5 சிறப்புகள்!
-
‘நீதித்துறையில் ஊழல்’ என NCERT பாடத்தில் சர்ச்சை… நீதித்துறைக்கு பகிரங்கமான மிரட்டல் - முரசொலி தலையங்கம்!