Tamilnadu
விலை உயர்ந்த செல்போனுடன் காவல்நிலையம் வந்த 3 சிறுவர்கள்.. போலிஸாரை ஆச்சரியப்பட வைத்த சம்பவம்!
செல்போன்கள் மீது சிறுவர்களுக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு இருக்கும். நமக்கு என்று தனியாக ஒரு செல்போன் இருந்தால் நன்றாக இருக்கும் என அனைத்து சிறுவர்களுமே நினைப்பது உண்டு. ஆனால் ஒருசில சிறுவர்கள் மட்டுமே தனியாக செல்போன் வைத்துள்ளனர்.பலர் தங்களது பெற்றோர்களின் செல்போனையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாலையில் கிடந்த விலை உயர்ந்த செல்போனை அப்படியே எடுத்துச் செல்லாமல் அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களின் செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முகமது பயஸ், ராபில், ஷாகித். இவர்கள் மூன்று பேரும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் பள்ளி முடித்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது குளச்சல் அடுத்த உடையார்வினை பகுதியில் உள்ள சாலையில் விலை உயர்ந்த செல்போன் இருந்ததைப் பார்த்துள்ளனர். பிறகு அதை எடுத்த அவர்கள் அருகே இருந்த காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
பின்னர் அங்குக் காவல் ஆய்வாளர் கிறிஸ்டியனிடம் செல்போனை ஒப்படைத்து, 'சார் சாலையில் செல்போன் கிடந்தது. இதை சரியான உரிமையாளரிடம் ஒப்படைத்துவிடுங்க' என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
சிறுவர்களின் இந்த நல்ல குணத்தைப் பார்த்த காவல் ஆய்வாளர் கிறிஸ்டியன் அவர்களிடம் கை குலுக்கி பாராட்டி வழி அனுப்பிவைத்தார். மேலும் அப்பகுதி மக்களும் சிறுவர்களை நேர்மையைக் கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“இந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான்”: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரம்.. விஜய் விளக்கம் அளிக்க வேண்டும்... - வெளுத்தெடுத்த முரசொலி !
-
ஜூம்லா விடும் மோடி அரசு : “மக்களை என்றைக்காவது மகிழச் செய்தது உண்டா?” - கி.வீரமணி சரமாரி கேள்வி!
-
“ஆனைமங்கலம் சோழர் செப்பேடுகளின் உண்மையான இருப்பிடம் தமிழ்மண்ணே!” : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
“இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்லும் கல்வி அமைச்சர் ராஜ்மோகன்!” : சரவணன் அண்ணாதுரை விமர்சனம்!