Tamilnadu
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட சிறுமி.. கதறிய தாய்.. துரிதமாக செயல்பட்டு கைப்பற்றிய இளைஞர் !
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது குற்றால அருவி. இங்கு புது குற்றாலம், மெயின் அருவி, பழைய குற்றாலம் என பல அருவிகள் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பருவமழை காரணமாக குற்றால அருவியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை காண சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தற்போது குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆங்காங்கே பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பழைய குற்றாலம் அருவியில் குளிக்க வந்துள்ளனர். அப்போது பெண் ஒருவர் தனது பெண் குழந்தையுடன் குளித்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த குழந்தை தடாகத்தில் திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதனை கண்ட குழந்தையின் தாயும், அருகிலிருந்தவர்களும் கத்தி கூச்சலிட்டனர். அதோடு குழந்தையை மீட்க அங்கிருந்தவர்கள் தீவிரமாக முயன்றனர். அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர் குழந்தையை அடித்து செல்லப்படும் இடத்திற்கு துணிச்சலாக சென்றார். அப்போது சிறுமி ஒரு பாறையின் இடுக்கில் பிடித்துக் கொண்டு நின்றாள். அந்த இளைஞர் அங்கு சென்று குழந்தையை தூக்கி கொண்டு மேலே வந்தார்.
பின்னர், அங்கு வந்த பதறியடித்து வந்த அந்த குழந்தையின் தாய், தனது குழந்தை தான் என்று கூறி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சிறுமியை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குழந்தையை துரிதமாக செயல்பட்டு மீட்ட இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக காணப்படுகிறது.
Also Read
-
RGNIYD நிறுவனத்தில் RSS தலைமையைக் கொண்டுவர சூழ்ச்சி : விடுதலை நாளேடு எச்சரிக்கை!
-
”ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பும் பணி தொடங்கும்” : ராகுல் காந்தி அதிரடி!
-
”பா.ஜ.க.வின் தோல்வி தவிர்க்க முடியாதது” : காரணத்தை பட்டியலிட்ட அகிலேஷ்!
-
”காங்கிரஸ் வென்றால் இந்துக்களுக்கு என்று ஒரு நாடே இருக்காது” : மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கும் பாஜக!
-
அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு !